வலையொளியைப் (யூரியூப்பைப்) பார்த்து மனைவியின் மகப்பேற்றைக் கண்காணித்த கணவரைக் காவற்றுறை பிடித்துச் சிறையில் அடைத்ததாம்.
வலையொளியைப் (யூரியூப்பைப்) பார்த்துப் பள்ளிக்கூட மாணவியின் வயிறு பெருத்தது. கருக்கலைப்புச் செய்த மருத்துவமனைக்கு மூடுவிழா(சீல் வைப்பு).
இவ்வாறு பரவும் செய்திகளுக்குப் பின்னே, 'இணையம் வந்ந பிறகு எத்தனை மாற்றங்கள்' என்று பேசப்படுகிறது. இணையம் வழி பரவும் கேடு விளைவிப்பனவற்றை இணையத்தில் இருந்து அகற்ற அறிஞர்கள் முயலவேண்டும்.
எல்லாவற்றுக்கும் வேண்டிய மதியுரை இணையத்தில இருக்கென்று நேரடியாக ஒரு மதியுரைஞரை (ஆலோசகரை) நாடாமல் தன்னிச்சையாக முடிவேடுப்பது பயனற்றது. மேலுள்ள காட்சியும் கருத்தும் (மீம்ஸ்) பற்றியும் சிந்திப்போம். நம்ம சூழலில் நாலு ஆள்களைக் கேட்டறிந்து நல்வழி செல்வதே பயன்தரும்.
சின்னஞ் சிறிசுகள் காதல், திருமணம் என்பவற்றைச் சிந்திக்க முன், நாளைக்கு எப்படித் தின்று குடிப்பது பற்றிச் சிந்தித்தால் தெருவில பிச்சை எடுக்காமல் வாழ முயலலாம். அதனை உணர்த்தவே மேலுள்ள காட்சியும் கருத்தும் (மீம்ஸ்) விளக்குவதாக நம்புகிறேன்.